
பூக்களில் அமர்ந்து
அதற்கு
சிறகு தர முயற்சி செய்கிறது
இவள் ஸ்பரிசம்
பூ பறிக்கும்போதெல்லாம்..!
வைரபாரதி

இதயத்தை
எழுத்துக்களாக செய்யும் போது
எதிர் திசையில் நீ
வருவதற்கான வாசனை சுவடுகள் !!
சிறகால் கூடு செய்து
அதில் தங்க சொல்கிறது
உன் காதல் !!
ஆஹா தூரிகையாகிறது உன் நிழல்
ஓவியமாக நீ அசைந்து வருகையில் ....
முத்தங்களுக்கு உதடுகள்
தேவைப்படும்போதெல்லாம்
அமுதம் சிந்துகிறது
உன் அழகு ..!
கவி வைரபாரதி
காதல் என்றால் கவிதையின் இதய விடிவம்