Saturday, March 8, 2008

வைரபாரதி காதல் கவிதைகள்


காதலே...
சிலையாகவும் சிற்பியாகவும்
ஒரே நேரத்தில் எப்படி உன்னால்
என்னை மாற்றி விட முடிகிறது ?


இதயத்தை

எழுத்துக்களாக செய்யும் போது

எதிர் திசையில் நீ

வருவதற்கான வாசனை சுவடுகள் !!


சிறகால் கூடு செய்து

அதில் தங்க சொல்கிறது

உன் காதல் !!


ஆஹா தூரிகையாகிறது உன் நிழல்

ஓவியமாக நீ அசைந்து வருகையில் ....


முத்தங்களுக்கு உதடுகள்

தேவைப்படும்போதெல்லாம்

அமுதம் சிந்துகிறது

உன் அழகு ..!


கவி வைரபாரதி